யாழ் பல்கலை மாணவர்களின் மோதல் விசாரணை அறிக்கை கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிடையே அண்மையில் இடம்பெற்ற குழு மோதல் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 8ம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பாக தனிநபர் ஆயத்தினால் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையே துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனி நபர் விசாரணை ஆயத்தின் தலைவர் ஓய்வு நிலைப் பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தினால் இந்த விரிவான விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவான அறிக்கை அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் தீவிரமாக ஆராயப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!