“என் கனவு யாழ்” வெற்றிகரமாகத் தொடரட்டும் : அங்கஜனிற்கு பிரதமர் மகிந்த வாழ்த்து!

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் “என் கனவு யாழ்” எனும் பயணம் வெற்றிகரமாகத் தொடர்வதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 75 ஆவது பிறந்த தினத்திற்கு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த வாழ்த்திற்கு தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச கூடவே தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!