தடைக்கு எதிரான நகர்த்தல் பிரேரணை இன்று விசாரணை!

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தடை உத்தரவு தொடர்பான நகர்த்தல் பிரேரணை தொடர்பான விசாரணை, இன்று இடம்பெறவுள்ளது.

கடந்த 20ஆம் திகதி, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் அடங்கலாக 17 பேருக்கு, நினைவேந்தலை நடத்துவதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த தடை உத்தரவுக்கு எதிரான நகர்த்தல் பிரேரணை, நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்ட நீதவான் நிதிமன்ற நீதவான் நேற்று நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாத நிலையில், பதில் நீதவான் குறித்த பிரேரணை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, நாளை வரை விசாரணைகளை ஒத்திவைத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!