கிளிநொச்சி வயோதிபருக்கு தொற்று! – சமூகத் தொற்றா என சந்தேகம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயோதிபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் எரிபொருள் கடையொன்றினை நடத்திவரும் 72 வயதுடைய பாரதிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம், திருவையாறு, தர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

ஆனால், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளவர் வெளித் தொடர்பு இல்லாதவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!