கிழக்கில் நேற்று மட்டும் 43 பேருக்கு தொற்று உறுதி!

கிழக்கு மாகாணத்தில் நேற்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் 32 பேருக்கும் அட்டாளைச்சேனையில் 6 பேருக்கும் வாழைச்சேனை பகுதியில் 4 பேருக்கும், ஆலையடிவேம்பு பகுதியில் ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுடுத்து கிழக்கின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் அம்பாறையில் 149 பேரும் மட்டக்களப்பில் 92 பேரும் திருகோணமலையில் 16 பேரும் காணப்படுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!