தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நாளை பொறுப்பேற்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமால் ஜி புஞ்ஜிஹேவா கடமைகளை நாளைய தினம் பொறுப்பேற்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்,தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக H.M.MOHAMAD, S.B.DIVARATNA, KPP.PATHIRANA மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் நியமிக்கபட்டுள்ளதுடன், அவர்களும் நாளைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்து கடந்த காலங்களில் பல விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், அதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவில் மாற்றங்கள் ஏற்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் புதிய உறுப்பினர்கள் நாளை பொறுப்பேற்கவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!