தியாகதீபம் திலீபனுக்கு சிலை வைப்பதோடு கிட்டு பூங்கா மீண்டும் புனரமைக்க வேண்டும் – யாழ். மாநகர சபை கன்னி உரையில் மணிவண்ணன்

தியாக தீபம் திலீபனுக்கு யாழ் மாநகரசபை சிலை வைத்தால் அதனை வரவேற்பதோடு அதற்கான ஒத்துழைப்பும் வழங்குவோம்.

அதேபோன்று மாவீரர்களின் பெய ரில் முன்னர் இருந்த வீதிகளுக்கு மீண்டும் அவர்களது பெயர்கள் சூட்டப்படவேண்டும் என்றும் கிட்டு பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் கிட்டு பூங்கா என பெயர் சூட்டப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக் கள் முன்னணியின் தேசிய அமை ப்பாளரும் யாழ் மாநகரசபை உறுப் பினருமான விஸ்வலிங்கம் மணி வண்ணன் தெரிவித்தார்.

யாழ் மாநகரசபையின் கன்னி அமர்வு நேற்று யாழ் மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு கன்னி உரை வழங்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில்,

எமக்கு மக்களால் வழங்கப்பட்டுள்ள ஆணை என்பது எமக் கான கௌரவம் அல்ல. அது எமக்கு வழங்க ப்பட்ட சேவையாகவே நாங்கள் கருதுகின் றோம். எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற கடமையை நாங்கள் செவ்வனே மேற்கொ ள்வோம்.

நாங்கள் ஒரு கட்சியிலிருந்து இந்த மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தா லும் எங்களுக்கென்று சில கடமைகள் இருக் கின்றன.

இந்தப் பிரதேச மக்களுடைய அபிவிருத்தியை நாங்கள் மனதிலே நிறுத்தி செயற்பட வேண்டும். அந்தக் கடமைப்பா ட்டை நாங்கள் எங்களுடைய மனதிலே முன்னிறுத்தி பணியாற்றவேண்டும்.

தியாக தீபம் திலீபனுக்கு சிலை அமை ப்பது தொடர்பாக அறிந்திருந்தோம். எங்களுடைய கட்சியின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கின்றது. எமது முதலாவது செயற்பா டாக திலீபனுக்கு சிலை அமைப்பதனை முன் னெடுக்கவே நாங்கள் விரும்புகின்றோம்.

நல்லூரின் வடக்கு வீதியிலே தியாக தீபம் திலீபனுக்கு நினைவுக் கல் ஒன்று இருந்தது. அவ்விடத்திலேயே அவர் உண்ணாவிரதமிருந்தார்.

அந்த இடமும் புனரமைப்புச் செய் யப்படவேண்டும் அதேபோல பேரினவாதிகளால் அழிக்கப்பட்ட தியாகதீபம் திலீபனின் தூபியை அடக்கு முறைக்கு நினைவுச்சின் னமாக வைத்துக்கொண்டு அதன் அருகில் புதிய தூபியை அமைத்தால் சிறப்பாக இரு க்கும்.
அதேபோல முத்திரைச் சந்தியிலே கிட்டு பூங்கா என ஒரு பூங்கா இருந்தது. அதனு டைய பெயரை சங்கிலியன் பூங்கா என்று மாற்றிவிட்டார்கள்.

அதனை மீண்டும் கிட்டு பூங்காவாக மாற்றுவதற்கு நாங்கள் சபையில் முன்மொழிவுகளைச் செய்யவேண்டும். இது சிதைவடைந்த ஒரு பற்றைக் காடாக மாறியுள்ளது. அதனை மீண்டும் கிட்டு பூங்கா வாக நாங்கள் மீள நிர்மாணிக்க வேண்டும்.

விடுதலைப் போராட்டத்திலே பல்வேறு தியாகங்களைச் செய்தவர்களைக் கௌர விக்கும் விதமாக யாழ் மாநகரசபைப் பகுதி க்குள்ளே உள்ள வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர்கள் முன்னர் சூட்டப்பட்டிருந்தன.

சில வீதிகளுக்கு வேறு பெயர்கள் மாற்றப்பட்டு விட்டன. அந்த வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் மீண்டும் அப் பெயர்கள் இடப்படவேண்டும்.

இந்த சபையிலே ஒரு மாற்றம் தெரிந்தது. எல்லோரும் தேசியம் பேசுகிற ஒரு நிலைப் பாட்டினை எடுத்திருக்கின்றார்கள்.

அந்த வகையில் முன்னர் இருந்தவாறு மாவீரர்களது பெயர்களை வீதிகளுக்கு சூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள் என நினை க்கிறேன்.

இங்கு நடைபெற்றது ஒரு விடுதலைக் கான போராட்டம். அடக்கப்பட்ட தமிழ் பேசுகி ன்ற மக்களுடைய விடுதலைக்காகவே இந்தப் போராட்டம் நடைபெற்றது. அந்த மக்களு டைய விடுதலைக்காகப் போராடிய போராளி களும் இருக்கிறார்கள்.

நாம் யாருக்கு எதிராக போராடினோமோ எங்களை அடக்க நினை த்த அந்த அரச இயந்திரத்தோடு இணைந்து எமக்கு எதிராக போராடிய போராளிகளும் இருக்கிறார்கள்.

எம்மைப் பொறுத்தவரை யில் விடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கு மாத்திரமே சிலைவைக்க வேண்டுமே தவிர விடுதலைக்கு எதிராகப் போராடிய அரச இயந்திரத்துடன் சேர்ந்து இயங்கி தமிழ் மக்களின் அழிவிற்குக் காரண மாகியவர்களுக்கு சிலை வைப்பது பொருத்த மற்ற ஒரு செயற்பாடாகவே இருக்கும்.

வேண்டுமானால் எமது விடுதலைக்கு எதிராகச் செயற்பட்டவர்களது அநியாயங்க ளைக் காட்சிப்படுத்தலாம். நாங்கள் இரண்டு விதமான உதாரணங்களை வைத்துக்கொ ண்டு முன்செல்ல முடியும். ஒன்று நாம் இவ ர்களைப் போல வரவேண்டும் என்பது.

மற்றையது இவர்களைப் போல வந்துவிடாதே என கூறுவது. அங்கு கிட்லரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. கிட்லர் போலே வந்து விடாதே என ஜேர்மனிச் சிறுவர்களுக்குச் சொல்லப்படுகின்றது. அவ்வாறான விதத்தி லும் நாங்கள் நினைவுச் சின்னங்களை உருவாக்கலாம்.

மேலும் கடந்த காலங்களில் யாரும் ஊழல் செய்ததாக நாங்கள் இங்கு சொல்ல வில்லை. ஊழல் செய்திருக்கக்கூடாது என் பதுதான் எங்களுடைய விருப்பமாக இருக்கின்றது.

மக்களுடைய வரிப்பணம் மக்களுக்குச் சென்றடையவேண்டும் மக்களுடைய வரிப்பணத்தை எவரும் பயன்படுத்தியிருந் தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடு க்கப்படவேண்டும்.

கடந்த காலங்களில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பின் அவற்றிற்கு நடவ டிக்கை எடுக்கத் தவறுவோமாக இருந்தால் எதிர்காலத்தில் நாங்களும் ஊழல் செய்வத ற்கு வழிவிட்டவர்களாக மாறுவோம். யாரும் ஊழல் செய்தார்கள் என்று நான் கூறவில்லை.

யாரும் ஊழல் செய்திருந்தால் அது கண்டறி யப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
ஒற்றுமை என்ற விடயத்தில் பல்வேறு விடயங்களில் ஒற்றுமைகள் இருக்கி ன்றது. கொள்கைக் கான விடயம் எனும் போது இங்கு பலரு க்கு அது சாத்தியமற்ற ஒன்று.

இந்த உள்ளூ ராட்சி சபைகளை அமைப்பதில் பல கட்சிகள் ஒற்றுமையுடன் இணைந்திருந்தன. நாங்கள் மட்டும் உங்களது ஒற்று மைக் கூட்டில் இணை ந்திருக்கவில்லை.

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் ஒற்றுமையோடு தேசிய ரீதியான ஒற்றுமையாக எங்களை இழுத்துவிடாதீர்கள். நாங்கள் எமது தேசியம் சார்ந்த நிலைப்பாட்டிலிருந்து இந்த ஒற்று மைக்குள் இணைந்துவிட முடியாது.

எங்களுடைய கட்சியின் உருவாக்கமானது எங்க ளுடைய விடுதலைப் போராட்டம் எங்கு மௌனிக்கப்பட்டதோ அந்த இடத்திலிருந்து எமது உரிமைகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி தொடங்கப்பட்டது.

மக்கள் தங்கள் வாழ்வி யலை சுயமாகக் கட்டியெழுப்பவேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகின் றோம். அதற்கான அதிகாரம் எம்மிடம் வரவேண்டும் என்பதற்காகவே நாங்கள் போரா டுகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!