மட்டக்களப்பு மாநகர பாதீடு நிறைவேற்றம்!

மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் (பாதீடு) இரண்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

பாதீட்டில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டு, மீண்டும் முன்வைக்கப்படுவதாகவும், அவற்றிற்கு ஆதரவு வழங்குமாறும் மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்கள் என 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த பாதீட்டுக்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் ஈ.பி.டி.பியின் ஒரு உறுப்பினரும் சுயேட்சை குழுக்களின் மூன்று உறுப்பினர்களுமாக 18 பேர் வாக்களித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!