உடுவிலில் ஒருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 124 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 105 ஆதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!