திருகோணமலையில் நேற்று 9 பேருக்கு கொரோனா!

திருகோணமலையில் மேலும் ஒன்பது புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து திருகோணமலையின் தொற்றாளர்களது எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

நேற்ற மூதூரில் இருவரும் திருகோணமலையில் ஏழு பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை நகரில் இதுவரை 64 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மூதூரில் 27 பேரும் கிண்ணியாவில் எட்டுப் பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். அத்துடன், தம்பலகாமம் பகுதியில் ஆறு பேரும், கோமரங்கடவல மற்றும் குச்சவெளியில் தலா ஒவ்வொருவரும் சேருவில மற்றும் உப்புவெளியில் தலா மூவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!