விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, “நீதியரசர் பேசுகிறார்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொள்ளவுள்ளார்.

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர், இரா.சம்பந்தனும், சி.வி.விக்னேஸ்வரனும், பொது நிகழ்வு ஒன்றில், ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.

வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள சூழலிலும், முதலமைச்சரின் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியாகி வரும் நிலையிலும், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!