200 ஐ எட்டுகிறது உயிரிழப்பு! – மேலும் 636 பேர் பாதிப்பு.

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 199ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நாட்டில் நேற்று 636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!