அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், புதியஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் முக்கியஸ்தர்களான, நி.பிரதீபன், டொன்பொஸ்கோ, கட்சி உறுப்பினர்கள், ஈ.பிஆர்.எல்.எவ் மத்தியகுழு உறுப்பினர்களான கே.அருந்தவராஜா,ரேகன், புதிய அரச பொது ஊழியர் சங்கத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளுக்கு மன்னிபே கிடையாதா?, கைதிகளை விடுதலைசெய், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காதே, காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களுக்கு பதில் என்ன? போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!