சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் கொரோனா தனிமைப்படுத்தலில்!

ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவருடன் தொடர்புடைய 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கயந்த கருணாதிலக்க, தலதா அத்துகோரளை, எம்.ஏ.சுமந்திரன், பைசல் காசிம், எம்.எம் ஹரிஸ், எம்.எஸ். தௌபீக், நசீர் அஹமட் உள்ளிட்டவர்களே ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களுக்கு பி சி ஆர் பரி சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தம்மை 07 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!