வட மாகாணத்தில் சடுதியாக அதிகரித்துள்ள கொரோனா தொற்று!

வட மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 55 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இதன்படி, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 51 பேரும், முல்லைதீவு மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும்,யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருமே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர்

யாழ் மருத்துவ பீட ஆய்வுகூடம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் என்பற்றில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் 19 பரிசோதனைகளின் அடிப்படையிலேயே, குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்று நிலைமை கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!