போர்க்குற்ற ஆதாரங்களை கொடுத்து விட்டார் ஜனாதிபதி!

இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஜனாதிபதியே வலுவான ஆதாரங்களை கொடுத்துள்ளார் என ஹெல பொது சவிய என்ற பௌத்த அமைப்பு எச்சரித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினரை இலக்கு வைத்து, ஜனாதிபதி வெயியிட்ட அச்சுறுத்தலான கருத்தானது, இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் தளபதிகள் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தத் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க கூடிய சட்சியாக அமைந்துள்ளது என ஹெல பொது சவிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் முழுப்பெயரை சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் கோபமாக கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் பித்தளை சந்தியில் குண்டு வீசியதாகவும், எனினும் பணிகளை ஆரம்பித்த காலத்தில் பதிலளித்த விதத்தில் செயற்படும் திறன் இன்னும் தன்னிடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

”எனினும் நான் இறுதியில் பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன். அந்த நிலைக்கு கொண்டு வர முடியும். எதற்கும் தயாராக இருக்கும் ஒரு கதாபாத்திரம் நான்”

அரசியல்வாதிகளுக்காக தன்னால் இவ்வாறு செயற்பட முடியுமென்ற கோட்டாபய ராஜபக்சவின் கருத்ததானது, நாட்டின் ஜனாதிபதியாக ‘இல்லாத பிரச்சினைகளை வரவழைப்பது’ போன்றது என ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவன்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் அறிக்கை வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் ஜினவன்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த கருத்து நமது ஆயுதப் படைகளின் தளபதியும், நமது நாட்டின் தளபதியும் போர்க்குற்றங்களைச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு வலுவான சான்றாகும்.

எங்கள் ஜனாதிபதி ஒரு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி, இதுபோன்ற விடயங்களை இன்று எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியும் என்பதை அறிவார்.”

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜனாதிபதியின் உரை முன்வைக்கப்பட்டால் இது இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் விடயமாக மாறும்.

தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு இது மற்றொரு விதை. முப்படையினர் யுத்தக் குற்றங்களை இழைத்தனர் என்பதை நிரூபிப்பதற்கான சாட்சி இது.”

எந்தவொரு விவேகமுள்ள ஆட்சியாளரும் இத்தகைய அறிக்கையை வெளியிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, அரச தலைவர் தனக்கு அறிவுரை கூறும் ஆலோசகர்கள், விழாக்களுக்கு உரைகள் எழுதுபவர்களை உடனடியாக நீக்கி, பொருத்தமானவர்களை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.

இல்லையெனில் வாக்களித்த 69 இலட்சம் மக்களும் மேலும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்ற எச்சரிக்கையையும், ஜினவன்ச தேரர் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!