ரஞ்சனை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, நீர்கொழும்பு பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

இதன்படி, அவரின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்துள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, கடந்த 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தினால் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிட

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!