வடக்கில் நேற்று 18 தொற்றாளர்கள்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 319 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 360 பேரின் மதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 18 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னாரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கும் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கும் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வருகை தந்தவர்களிடம் எழுதுமட்டுவாழில் வைத்து மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அவ்வாறு மாதிரிகள் பெறப்பட்டவர்களில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் சுதுமலையைச் சேர்ந்தவர். மற்றவர் கண்டியைச் சேர்ந்தவர்” என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!