ஆளும்கட்சி எம்.பிக்கே இந்த நிலை!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார நிர்வாக தாமதங்களால் தன்னை இன்னமும் சுகாதார அதிகாரிகள் கிசிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லவில்லை என கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பேராதனை கிரிபத்கும்புரவில் உள்ள தனது வீட்டிலேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் கண்டு கிசிச்சை நிலையங்களிற்கு அனுப்புவதில் தாமதங்கள் காணப்படுகின்ற இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாதிரியை ஒருநாள் எடுத்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை பல நாட்களின் பின்னர் வெளியிடுவதில் அர்த்தமில்லை என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்படுவதற்காக காத்திருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!