நாட்டின் பல பாகங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடியுடன்கூடிய மழைபெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பிற்பகல் வேளையில் 75 மில்லிமீற்றர் மழைபெய்யகூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!