அடக்கத்துக்கு அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லை!

கொரோனா தொற்றால் இறப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்று பிரதமர் கூறவில்லை. மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படுமா என்று மரிக்கார் கேட்டார். அதற்கு அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்றே கூறினார் என ஆளும் கட்சி எம்பி கோகிலா குணவர்த்தன தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

கொரோனாவினால் ஏற்படும் மரணம் தொடர்பாக ஜனாதிபதியோ, பிரதமரோ தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு விசேட குழுவொன்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!