பாகிஸ்தானுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் சில இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சத்திடப்படவுள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமரின் விஜயத்தின் போதே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருநாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளை புதுப்பிக்கவும் இதன் போது எதிர்ப்பார்த்துள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!