400 ஐ நெருக்கும் மரணம் – 75 ஆயிரத்தை தாண்டிய தொற்று!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, மேலும் 802 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்தும் இதுவரை பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!