பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியீடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், இதுவரை எந்தவொரு ஆட்சேபனை மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

இவ்வாறு, ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு சம்பள நிர்ணய சபை கூடவுள்ளதாக பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படுமெனவும் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!