பிரதமரின் பரந்துபட்ட அரசியல் அறிவு குறித்து, கம்மன்பில அறிந்து கொள்ளவில்லை :மரிக்கார் விமர்சனம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பரந்துபட்ட அரசியல் அறிவு குறித்து, உதய கம்மன்பில போன்றோர் அறிந்து கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு, தாம் அனுமதி வழங்குவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், சடலங்களை அடக்கம் செய்ய, பிரதமர் தனது விருப்பத்தை மாத்திரமே வெளியிட்டதாகவும், அதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், உதய கம்மன்பிலவின் குறித்த கருத்துத் தொடர்பில், இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!