மன்னாரில் சலூன் உரிமையாளருக்கு கொரோனா!

மன்னார் நகரில் சிகை அலங்கார நிலையத்தை நடத்துபவருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 291 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 426 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்கு மட்டும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் மன்னார் நகரில் சிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவர். அதனால் அந்த சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு கடந்த சில நாள்களாக சென்றோர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றனர் என்றும் கேதீஸ்வரன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!