39 இலட்சம் ரூபா முறைகேடு குறித்த வழக்கிலிருந்து மஹிந்தானந்த அளுத்கமகே விடுதலை

இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்திற்கு சொந்தமான 39 இலட்சம் பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதித்ய படபெதிகே முன்னிலையில் இன்று (25) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கமுடியாதுள்ளதாக அறிவித்த நீதிபதி, 3 குற்றச்சாட்டுகளிலிருந்தும் பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!