யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர்..!

இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மூலம் நாட்டை வலப்படுத்த முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார் கப்ரால் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் யாழ்.பல்கலைகழகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் பல்கலைகழகத்தில் தென் மாகாண மாணவர்கள் கல்விகற்பதை மகிழ்ச்சியுடன் எடுத்துக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இது நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்துமென தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு சென்று முதலீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்க்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார் கப்ரால் இதன்போது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இத்துடன், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார் கப்ராலின் யாழ் விஜயத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!