பஸிலை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துகிறது இந்தியா!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் பஸில் ராஜபக்சவே வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் இதற்கு இந்தியா தனது பூரண ஆதரவை வழங்குமெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ சிங்கள ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 2024இல் நடத்தப்படும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பஸில் ராஜபக்ஸவே வேட்பாளராக நிறுத்தப்படுவார். இதற்கான செயற்பாடுகளை அவர் ஆரம்பித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டாவது முறையாக போட்டியிடாததால் அவர் தமது பதவி காலம் முழுவதையும் அனுபவிப்பார்.

அவரையடுத்து பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகவும் இருக்கக்கூடும் என்று நளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!