ஹிருணிகாவை கைதுசெய்யுமாறு விடுக்கப்பட்ட உத்தரவு மீளப்பெறப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு விடுக்கப்பட்டிருந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் மீளப் பெற்றுள்ளது.

2015 ஆம் ஆண்டில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததன் காரணமாக, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இன்று காலை குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானமையை அடுத்து, அதனை கொழும்பு மேல் நீதிமன்றம் மீளப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த வழக்கை எதிர்வரும் ஜுன் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!