வடக்கில் 14 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 13 பேரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 7 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர் அடையாளர்கள். அவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள்.

மேலும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!