கனடாவில் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம்: குழப்பத்தில் போலீசார்!

கனடாவில் உள்ள ஒரு வீட்டில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்கிரியின் வைட்ஹார்ன் பகுதியில் இருந்து சனிக்கிழமை பொலிசாருக்கு போன் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் அங்குள்ள வீட்டில் இருந்து ஒரு சடலத்தை கைப்பற்றினார்கள்.

உயிரிழந்தது ஆணா அல்லது பெண்ணா மற்றும் அவரின் வயது குறித்த எந்தவொரு தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் அந்த நபர் எப்படி இறந்தார் என தெரியாத நிலையில் இதை மர்ம மரணமாக கருதி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று சடலத்துக்கு பிரேத பரிசோதனை நடக்கவுள்ள நிலையில் அதற்கு பின்னர் மேலதிக தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!