சிறுமியை துன்புறுத்தி சாகடித்த ஆறு பேர் கைது!

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பெரியகல்லாறு பகுதியில் 12 வயது சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 10 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி இறந்து விட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்தார்.

சிறுமியின் தாயின் சகோதரி உட்பட சந்தேக நபர்கள் பல முறை சிறுமியை தாக்கியதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். இவ்வாறு அடித்ததன் விளைவாக உள் மற்றும் வெளிப்புற காயங்கள் காரணமாக ஏற்பட்ட தொற்று சிறுமியின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!