மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் காலமானார்

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 80 ஆவது வயதில் இன்று காலமானார்

ராயப்பு ஜோசப் ஆண்டகை நீண்டநாள் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் திருச்சிலுவை மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்

இதேவேளை இறுதிக்கிரிகைகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குரு முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!