கிறிஸ்தவர்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ பிராத்திப்பதாக பிரதமர் தெரிவிப்பு

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அனைத்து கிறிஸ்தவர்களும் இரக்கம், நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்புடன் வாழ பிரார்த்திப்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தியாக வாழ்க்கையின் மதிப்பையும், தைரியம் மற்றும் வலிமையை வாழ்க்கையில் அடைவதற்கான ஆன்மீக பாதையை எட்டுவதற்கு இன்றைய தினம் அனைவருக்கும் ஒரு முக்கியமான நாளாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நாளில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தியின் ஒளி சக மக்களுக்கு நிவாரண ஒளியை அனுபவிப்பதற்கு இடமளிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!