கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 14 நாடுகளில் பணிபுரியும் 30 ஆயிரத்து 831 இலங்கையகள் தமது தொழிலை இழந்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், கொரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்தது முதல் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் அனைத்து நபர்களுக்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இதுவரையில் 4 ஆயிரத்து 431 வெளிநாட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களில் 4 ஆயிரத்து 71 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!