தமிழ்-சிங்கள் புத்தாண்டுக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களை திறக்கத் தீர்மானம்

கொரோனா தொற்று அச்ச நிலை காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் திறக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களை திறப்பதற்கான உரிய திகதி குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்துவதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட அளவில் பரீட்சைகளை நடாத்துவதற்காக அனுமதியினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்கனவே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!