தனக்கும் தனது சகோதரர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தாம் இருவரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ.
‘எனக்கும் எனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையில் முரண்பாடு நிலவி வருவதாக பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் எனக்கும் எனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. நாங்கள் இருவரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம்.
ஜனாதிபதி தேர்தல் வரும்போது யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிப்பார். மஹிந்த ராஜபக்ஷவையே மக்கள் விரும்புகின்றனர். எனவே மஹிந்த ராஜபக்ஷ யாரை களமிறக்குகின்றாரோ அவர் வேட்பாளராக வருவார். அவரின் வெற்றிக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
மாறாக எனக்கும் சகோதரர் கோத்தபாயவுக்குமிடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.நாங்கள் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம். எமக்கிடையில் பிரச்சினையிருப்பதாக பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். நாங்கள் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!