அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர், தாதி, ஊழியர்கள் நால்வர் உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று கடந்தவாரம் வீடு திரும்பியிருந்த ஒருவர் மீண்டும் நோய் அறிகுறி காணப்பட்ட நிலையில் இன்று அச்சுவேலி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டமையை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!