அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்த நடத்தப்பட்டதே ஈஸ்டர் தாக்குதல்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மத தீவிரவாதத்தால் நடத்தப்படவில்லை என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொரளையில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை ஆசீர்வதித்து திறக்கும் விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியல் சக்தியை வலுப்படுத்துவதற்காக தூண்டப்பட்டதே இந்த தாக்குதல். எங்கள் சகோதரர்கள் மத தீவிரவாதத்தால் தாக்கப்படவில்லை. அரசியல் சக்தியை வலுப்படுத்த மத தீவிரவாதம் பயன்படுத்தப்பட்டது .

“இந்த தாக்குதலில் நாம் காண்பது மத தீவிரவாதம் அல்ல, ஆனால் சில குழுக்கள் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்த முயன்றதன் விளைவாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!