மணல் ஏற்றிச் சென்ற ட்ரக்டர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு!

தென்மராட்சி – கொடிகாமம், பாலாவி காட்டு பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கள்ள மணல் ஏற்றி சென்ற ட்ரக்டர் ஒன்றின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.

மணல் ஏற்றிச் சென்ற ட்ரக்டரை நிறுத்த எடுத்த முயற்சி பலனளிக்காமையால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ட்ரக்டரின் ரயர் ஒன்றில் சன்னம் துளைத்தமையால் அது காற்றுப் போய் காணப்படுவதாக தெரியவருகிறது.

ட்ரக்டரில் சென்றவர்கள் அதனை கைவிட்டு சென்றுள்ளதால் அவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!