ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்துள்ள இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என வாழ்த்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள நோன்பு பெருநாள் ரமழான் வாழ்த்துச்செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எந்தவிதமான அந்தஸ்த்து வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாக ரமழான் மாதத்தில் ஒரு வளமான வாழ்க்கைக்காக அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்வது ஒரு சமய மரபு என்ற போதிலும், அதன் சமூக பெறுமானம் போற்றத்தக்கதாகும் எனவும் ஜனாபத குறிப்பிட்டுள்ளார்

உலகம் எதிர்கொள்ளும் கொரோனா பேரழிவிலிருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

எனவே இந்த நோய்த்தொற்று நிலைமைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் பிரார்த்தனையாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

சமூகங்களுக்கு இடையில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பி உலகுக்கு எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

புனித அல் குர்ஆனின் போதனைகளை பின்பற்றும் உண்மையான முஸ்லிம்கள் இந்த கூட்டு அர்ப்பணிப்பையும் திட உறுதியையும் மேலும் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!