கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

நாட்டில் இன்று (19) காலை வரையான காலப் பகுதியில் புதிதாக 2,518 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டது.

இவர்களில் 40 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

கொழும்பு மாவட்டத்தில் 333 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 350 பேரும் பதுளை மாவட்டத்தில் 47 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 27 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 65 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் 24 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 72 நபர்களும் கண்டி மாவட்டத்தில் 89 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் 56 பேரும் யாழ். மாவட்டத்தில் 144 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 நபர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!