தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 340 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய அடையாள அட்டை முறைமையை மீறி, வீடுகளிலிருந்து வௌியே வந்த 99 பேரும் இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 10,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!