இந்திய வைரஸ் வடக்கில் இல்லை!

வடக்கு மாகாணத்தில் இதுவரை, இந்தியாவில் பரவும் திரிபடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

வடக்கில் அடையாளம் காணப்பட்டிருந்த கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் பலரின் மாதிரிகள் எம்மால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது டென்மார்க், ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் வைரஸ் சிலருக்கு இனங்காணப்பட்டது. யாழ். மாவட்டம், நல்லூர் பிரதேசத்திலேயே மேற்படி வைரஸ் பரவல் இனங்காணப்பட்டது.

அதேவேளை, பிரிட்டனில் பரவும் வைரஸ் மன்னார் நகரப் பகுதியில் சிலருக்கு இனங்காணப்பட்டது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்றுடன் வடக்கில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை. வடக்கில் நாள்தோறும் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் இலங்கையில் திரிபடைந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!