வாகன இறக்குமதி இடைநிறுத்தம்: அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்

சொகுசு ஜீப்கள் உள்ளிட்ட 399 வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் எழுந்த எதிர்ப்பிற்கு மத்தியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்விடயம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறைந்தளவு வாகனங்களைக் கூட இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது

பிரதமரின் தலைமையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் Zoon-இல் நடைபெற்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!