அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மொரட்டுவை மாநகரசபை மேயர் கைது

அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மொரட்டுவை மாநகரசபை மேயர் சமன்லால் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்

மொரட்டுமுல்ல குதியில் நேற்று கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின்போது வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் இன்று கல்கிஸஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மொரட்டுவை மாநகரசபை மேயர் சமன்லால் பெர்ணான்டோ கல்கிஸ்ஸை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

மொரட்டுமுல்ல பகுதியில் நேற்று கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின்போது குறிப்பிட்ட சிலருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!