மேல் மாகாணத்தில் 45 வைத்தியசாலைகளில் இன்று முதல் தடுப்பூசி திட்டம்

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 45 வைத்தியசாலைகளில் இன்று முதல் தடுப்பூசி கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இதற்கமைய கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சைனோபார்ம் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!