இலங்கையிலிருந்து பயணிக்கும் விமானங்களுக்கு தடை விதித்துள்ள முக்கிய நாடு

இலங்கையிலிருந்து பயணிக்கும் விமானங்களுக்கு துருக்கி அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இலங்கை மற்றும் ஐந்து நாடுகளிலிருந்து பயணம் செய்யும் விமானங்கள் துருக்கிக்குள் பிரவேசிப்பதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், பிரேஸில், தென் ஆபிரிக்கா, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து துருக்கி பயணம் செய்யும் விமானங்களுக்கு துருக்கி தடை விதித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரவுகை காரணமாக நாட்டின் எல்லைகளையும் துருக்கி மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!