ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச நாளை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
இந்தத் தகவலை ‘மொட்டு’ கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக, ‘மொட்டு’ கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நேற்று எம்.பி.பதவியைத் துறந்தார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பஸில் ராஜபக்சவின் பெயர் பஸில் ராஜபக்சவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்சவை உள்வாங்கிக் nகொள்வதற்கான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ‘மொட்டு’ கட்சியின் பொதுச்செயலாளர் நேற்று வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை கூடுகின்றது. அதன்பின்னர் பஸிலின் பெயர் வர்த்தமானியில் வெளியாகும் என தெரியவருகிறது.
அத்துடன் இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு பத்து மணிக்கு ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!